கருணாநிதி அண்ணா அறிவாலயம் வந்தது முதல் தற்போது வரை - புதிய வீடியோ வெளியீடு
கருணாநிதி ஓராண்டு கழித்து அண்ணா அறிவாலயம் வந்தது முதல் தற்போதைய நிகழ்வு வரை ஒரு வீடியோ தொகுப்பு வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: கருணாநிதி ஓராண்டு கழித்து அண்ணா அறிவாலயத்துக்கு வந்தது முதல் தற்போதைய நிகழ்வுகள் வரை ஒரு வீடியோ தொகுப்பை பார்க்கலாம்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கருணாநிதிக்கு உடல்நல குறைவால் அவரால் எந்த ஒரு விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. அவரது உயிரினும் மேலான முரசொலி இதழின் பவள விழாவில் கூட கருணாநிதி பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் கருணாநிதி கடந்த டிசம்பர் மாதம் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றது முதல் தற்போது வரை நிகழ்வுகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.
கருணாநிதிக்கு பிடித்த இடம்
கருணாநிதி தனது வீட்டை காட்டிலும் அதிக நேரம் செலவிட்டது அண்ணா அறிவாலயத்திலும் முரசொலி அலுவலகத்திலும்தான். அப்படிப்பட்ட இடங்களுக்கு முன்பு போல் கருணாநிதியால் செல்ல முடியவில்லை. இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் தற்போது முன்னேறி வரும் நிலையில் அவர் முதன் முதலாக கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார்.
கிரிக்கெட்
பின்னர் கருணாநிதி டிவியில் கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தார். மிகவும் உற்சாகமாக அவர் பார்த்து ரசித்தார். ஸ்டாலின் பேசிய பொதுக் கூட்ட வீடியோவை தனது செல்போனில் இருந்து காண்பிக்க அதை சிரித்தபடியே கருணாநிதி பார்த்தார்.
முரசொலி பத்திரிகை
முரசொலி பத்திரிகையில் ஸ்டாலின் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் குறித்த செய்திகளை அவர் காண்பிக்க கருணாநிதி அதை படித்தார். முரசொலி பவளவிழா பொதுக் கூட்டம் அழைப்பிதழும் அவரிடம் காண்பிக்கப்பட்டது.
கைகளில் முத்தமிட்ட மூதாட்டி
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 74 வயது பாப்பாத்தி அம்மாள் என்பவர் கருணாநிதியை சந்திக்க விரும்புவதை அறிந்த ஸ்டாலின் அவரை கோபாலபுரம் இல்லத்துக்கு அழைத்து வந்தார். அப்போது கருணாநிதியை பார்த்த உணர்ச்சி மிகுதியால் அவர் தேம்பி அழ ஆரம்பித்தார். பின்னர் கருணாநிதியின் கைகளில் முத்தமிட்டார்.
தொண்டர்களை சந்தித்த கருணாநிதி
சென்னைக்கு ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி மரியாதை நிமித்தமாக கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இதையடுத்து அவரை வழியனுப்ப கருணாநிதி வாசல் வரை அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கிருந்த தொண்டர்களுக்கு கருணாநிதி கையசைத்தார்.
கருணாநிதி வருகை
இதையடுத்து மார்ச் 18-ஆம் தேதி மீண்டும் அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார் கருணாநிதி. அப்போது வருகை பதிவேட்டில் மு.க என்று கையெழுத்திட்டார். முரசொலி கண்காட்சியையும் அவர் ரசித்தார். இதுபோல் பேரனுடன் கிரிக்கெட் விளையாடுவது, பேத்தி பாடிய பாட்டை கேட்பது என கருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருகிறது.