தயாளு, யாராவது வந்து என்னை எங்கே என கேட்டால்.. இணையத்தை உலுக்கும் புகைப்படம்
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் இணையதளத்தையும், சமூக வலைதளங்களையும் ஒரு புகைப்படம் உலுக்கி எடுத்து வருகிறது.
அந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் நெகிழ்ந்து போகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஆயிரம் அர்த்தங்களை அந்த புகைப்படம் எடுத்துக் கூறுகிறது.
ஒவ்வொருவரும் தங்களது மனதைப் பிசையும் வாசகங்களை போட்டு அதை ஷேர் செய்தும் வருகிறார்கள். தயாளு அம்மாள் வீட்டுக் கதவைத் திறந்து பார்க்கிறார். வெளியில் கருணாநிதி நிற்கிறார். இதுதான் அந்தப் புகைப்படம்.
அதற்கு ஒவ்வொருவரும் போடும் வாசகம்.. படிக்கப் படிக்க நெஞ்சைப் பிசைகிறது. உண்மையிலேயே கருணாநிதி இப்படித்தான் பேசியிருப்பாரோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு மக்கள் இதற்கு வரிகளைத் தீட்டி கண்களை குளமாக்கி வருகின்றனர்.
நம்மை உருக்கிய ஒரு வாசகம் இது
தயாளு செல்கிறேன்,
— Thavasiraj (@thavasiraj95) August 8, 2018
அன்பு உடன்பிறப்புக்கள் யாரேனும் வந்து, என்னை எங்கே? என்று கேட்டால். அண்ணாவை காண சென்றுவிட்டேன்..என்று கூறு.😥😭😭 #கருணாநிதி pic.twitter.com/gxpjJCOTA4
தயாளு செல்கிறேன், அன்பு உடன்பிறப்புக்கள் யாரேனும் வந்து, என்னை எங்கே? என்று கேட்டால். அண்ணாவை காண சென்றுவிட்டேன்..என்று கூறு.
#கருணாநிதி