For Daily Alerts
Just In
அண்ணாவுக்கு அளித்த வாக்குறுதியை இறந்த பிறகு காப்பாற்றிய கருணாநிதி
Recommended Video
அண்ணாவுக்கு அளித்த வாக்குறுதியை இறந்த பிறகு காப்பாற்றிய கருணாநிதி
சென்னை: பேரறிஞர் அண்ணாவுக்கு அளித்த வாக்குறுதியை இறந்த பிறகு காப்பாற்றியுள்ளார் கருணாநிதி.
உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் சந்தனப் பேழையில் வைத்து மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நீதிமன்றம் சென்று போராடி வென்றனர். இறந்த பிறகும் போராடி வென்றவர் கருணாநிதி என்ற பெயரை பெற்றுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்ற கருணாநிதி அதை தான் திரும்பி வரும்போது பத்திரமாக அவர் காலடியில் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்து கவிதை எழுதியிருந்தார்.
கவிதை மூலம் அளித்த வாக்குறுதியை அவர் நேற்று காப்பாற்றிவிட்டார். தற்போது அண்ணாவுக்கு அருகே தம்பி ஓய்வெடுக்கிறார்.
Comments
English summary
DMK supremo Karunandhi has fulfilled his promise to former CM Annadurai on wednesday.
Story first published: Thursday, August 9, 2018, 8:59 [IST]