கொள்ளுப் பேரன் ரஞ்சித் நிச்சயத்திற்கு வந்து வாழ்த்திய தாத்தா கருணாநிதி
சென்னை: நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா - கவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித் ஆகிய இருவரின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அக்ஷிதாவுக்கும், மனு ரஞ்சித்துக்கும் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று ஜூலை 10ம் தேதி திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது.
கவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித். இவரது தாயார் தேன்மொழி, திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகளாவார். தனது கொள்ளுப் பேரன் நிச்சயதார்த்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இவ்விழாவில் திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை. இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர்.
அடுத்த ஆண்டில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு மொத்த திரையுலகினரையும் அழைக்க விக்ரம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.