ரத்த அழுத்த குறைவால் மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி.. தற்போது நலம்: ஆ.ராசா
Recommended Video
சென்னை: கருணாநிதி உடல்நிலை தற்போது சீரடைந்துள்ளதாக திமுக தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா தெரிவித்தார்.
காவிரி மருத்துவமனையில் கருணாநிதி சேர்க்கப்பட்ட பின்னர் முன்னாள் மத்திய அமைச்சரான ஆ. ராசா செய்தியாளர்களைச் சந்தித்தார். பெரும் திரளான தொண்டர்Kளுக்கு மத்தியில் அவர் பேசுகையில், திமுக தலைவருக்கு திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த குறைவு காரணமாக அவரை மருத்துவமனையில் சேர்க்க நேரிட்டது.
மருத்துவமனையில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் விளைவாக அவருக்கு சிறிது நேரத்திலேயே ரத்த அழுத்தம் சீரடைந்தது. தற்போது அவரது நிலை சீராகியுள்ளது.
ரத்த அழுத்தம் சீராகியுள்ளது. செயற்கை சுவாசம் எதுவும் பொருத்தப்படவில்லை. அவர் நலமாக இருக்கிறார். தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.
#WATCH: DMK president M. Karunanidhi being taken to Chennai's Kauvery Hospital.#TamilNadu pic.twitter.com/uJ06YHOU5B
— ANI (@ANI) July 27, 2018
Tamil Nadu: DMK president M. Karunanidhi is being taken to Chennai's Kauvery Hospital. Visuals from outside his residence, where supporters have gathered in large numbers. pic.twitter.com/T0vgvGz4zR
— ANI (@ANI) July 27, 2018