கருணாநிதிக்கு 6வது நாளாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை.. உடல்நிலை சீராக உள்ளது
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு 6வது நாளாக காவேரி மருத்துவமனையில், தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவர் உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், அதன்பிறகு, உடல்நிலை மீண்டும் சீரடைந்தது. மூச்சு திணறலால் கருணாநிதி பாதிக்கப்பட்டிருந்தார் என்று மருத்துவமனை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் அதை தெளிவுபடுத்தியிருந்தது.
கல்லீரல் மற்றும் ரத்த அழுத்த சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், முதுமையை கருத்தில் கொண்டும், கருணாநிதி மருத்துவமனையிலேயே தொடர்ந்து சில நாட்கள் இருக்க வேண்டியிருக்கும் என்றும் காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, அவர் 6வது நாளாக இன்றும் சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதி உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.