கருணாநிதி நினைவேந்தல்: அமித் ஷா, குலாம் நபி உள்ளிட்டோர் பங்கேற்பு.. ராகுல் பங்கேற்க மாட்டார்!
திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்பட உள்ள நினைவேந்தல் கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகை தர உள்ளனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்பட உள்ள நினைவேந்தல் கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகை தர உள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இயற்கை எய்தினார். இந்த நிலையில் அவருக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
சென்னை நந்தனத்தில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கு பல முக்கிய தலைவர்கள் வர உள்ளனர். எல்லா மாநிலத்திலும் உள்ள முக்கிய தலைவர்களை அழைக்க ஸ்டாலின் அழைத்துள்ளார். இதுகுறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.
ஆக.30 நடக்கும் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார். காங்கிரஸ் கட்சி சார்பாக மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பங்கேற்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சில் பங்கேற்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பங்கேற்கிறார்கள்
ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்கிறார்கள் .
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சிபிஐ தேசிய செயலாளர் டி. ராஜா , சிபிஐஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஆக.30ம் தேதி மாலை நான்கு மணிக்கு நடக்கும்.