இலங்கைக்கு வழங்கிய போர்க் கப்பலை இந்திய அரசே! திரும்பப் பெறுக: கருணாநிதி
சென்னை: இலங்கைக்கு வழங்கப்பட்ட போர்க் கப்பலை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
போர் கப்பல் ஒன்றை இலவசமாக இந்திய அரசு இலங்கைக்கு அளித்திருப்பதற்கு தி.மு.க. சார்பில் எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு, அந்தப் போர்க் கப்பலைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.
போர் கப்பல் ஒன்றை இலவசமாக இந்திய அரசு இலங்கைக்கு அளித்திருப்பதற்கு #DMK சார்பில் எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு,
Read: http://t.co/W8fzk4GMps
— KalaignarKarunanidhi (@kalaignar89) August 31, 2015
இலங்கை அரசு அங்கே வாழும் தமிழர்களுக்கும், மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களுக்கும் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை விளைவித்த போதிலும், இந்திய அரசு, இலங்கை அரசுக்கு உதவி செய்வதை நிறுத்தாமல் செய்து கொண்டே வருகிறது.
அந்த வரிசையில் இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான வராஹா என்ற போர்க் கப்பலை சிங்களக் கடற்படைக்கு இந்தியா இலவசமாக தற்போது வழங்கியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த ராணுவத்தினருக்கு கடந்த காலத்தில் இந்திய அரசு இது போல் தான் பயிற்சி கொடுத்தது.
அந்த வரிசையில் தற்போது போர் கப்பல் ஒன்றை இலவசமாக இந்திய அரசு இலங்கைக்கு அளித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு, அந்தப் போர்க் கப்பலைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.