"வீட்டுச் சிறை" சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவாலயம் வருகிறார் கருணாநிதி?
வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக கிளம்பும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் கருணாநிதி. விரைவில் அண்ணா அறிவாலயத்துக்கு அவர் வருகை தரலாம் என கூறப்படுகிறது.
சென்னை: தாம் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கிளம்பியுள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அங்கு அவருக்கு தொடர்ந்து பேச்சு பயிற்சிக்கான சிகிச்சை உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வந்தது.
இதனால் கருணாநிதியிடம் இருந்து நீண்ட நாட்களாக அறிக்கைகள் எதுவும் வரவில்லை. இதை மையமாக வைத்து கருணாநிதி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என சர்ச்சை கிளம்பியுள்ளது.
மதிமுக பொதுச்செயலர் வைகோ திருச்சி பொதுக் கூட்டத்தில் இதனை பகிரங்கமாக தெரிவித்தார். அத்துடன் மறைமுக ஸ்டாலினையும் அவர் சாடியிருந்தார்.
இந்த சர்ச்சைக்கு முடிவு கட்ட செய்தியாளர்களை சந்திக்க கருணாநிதி முடிவு செய்துள்ளாராம். இதனால் விரைவில் அவர் அண்ணா அறிவாலயம் வந்து செய்தியாளர்களிடம் பேச இருப்பதாக கோபாலபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.