கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தயாளு அம்மாளுக்கு திடீ ரென்று சுவாசக் கோளாறு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தயாளு அம்மாள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட அக்கட்சியினர் பலர், மருத்துவமனைக்கு நேரில் சென்று தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்து அறிந்தனர். அவர், தற்போது நலமாக உள்ளதாகவும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தயாளு அம்மாளுக்கு கடந்த 27 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வருவதாகவும், சுவாசக்கோளாறு மற்றும் சிறுநீரகப் பிரச்னை தொடர்பான நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக வட்டார வட்டார தகவல்கள் தெரிகிக்கின்றன. கடந்த 2012-ம் ஆண்டு முதல் அல்சீமர் எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை தகவல்கள் வெளியாகியுள்ளன.