2221ல் அதிமுக ஆட்சிக்கு வரும்போது கருணாநிதி அதனை பார்த்து வாழ்த்த வேண்டும்.. செல்லூர் ராஜூ குசும்பு!
2221ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வரும்போது கருணாநிதி அதனை பார்த்து வாழ்த்த வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை: 2221ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வரும்போது கருணாநிதி அதனை பார்த்து வாழ்த்த வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ அவ்வப்போது எதையாவது பேசி நெட்டிசன்களிடமும் மீடியாக்களிடமும் சிக்குவது வாடிக்கையான ஒன்றுதான்.
தெர்மாகோல் திட்டத்தில் பிரபலமான செல்லூர் ராஜூ தனக்கு போட்டியாக யாரும் வந்து விடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ அடிக்கடி எதையாவது பேசி ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறார்.
மதுரை சிட்னி போல்
காரைக்குடி ஆச்சி, மதுரை சிட்னி போல் ஆகும் என அவர் பேசிய பேச்சுகள் சமூக வலைதளங்களில் பெரும் ஹிட்டடித்துள்ளன. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவர் கூறிய கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நீடுழி வாழ வேண்டும்
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியளார்களிடம் பேசிய அவர் திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற்று, நீடுழி வாழ வேண்டும் என்பதே அதிமுக தொண்டனின் விருப்பம் என்றார்.
பார்த்து வாழ்த்த வேண்டும்
மேலும் 2021ல் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும், அதை கருணாநிதி நலமுடன் இருந்து பார்த்து வாழ்த்த வேண்டும் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
செல்லூர் ராஜூக்கே வெளிச்சம்
2021-ல் அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதற்கு பதிலாக 2221 என்று உளறினாரா? அல்லது 2221ஆம் ஆண்டிலும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில் பேசினாரா என்பது அவருக்கே வெளிச்சம்.