தலைமைச் செயலகத்தில் அதிமுகவினருடன் அமைச்சர் ஆலோசனை- ஜனநாயகத்துக்கு கேடு: கருணாநிதி
கேள்வி: ஆட்சிக்கும், கட்சிக்கும் இடையே உள்ள மெல்லிய எல்லைக் கோட்டினை அழித்துத் துடைத்திட எத்தனிப்பது, ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்குக் கேடு பயக்கும். அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர், தலைமைச் செயலகத்திலேயே கட்சிக்காரர்களை அழைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி இருக்கிறாராமே?
பதில் : அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் அழைத்து, முதலமைச்சர் ஜெயலலிதாவே கோட்டையில் கூட்டம் நடத்தியதைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சரே கட்சிக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தியிருக்கும்போது, இதிலே என்ன தவறு இருக்கிறது என்று அந்த அமைச்சர் கூறியிருக்கிறாராம்! முதலமைச்சர் எவ்வழியோ, அவ்வழியில் அமைச்சரும் நடந்திருக்கிறார், அதிலே என்ன தவறு? எனினும், ஆட்சிக்கும், கட்சிக்கும் இடையே உள்ள மெல்லிய எல்லைக் கோட்டினை அழித்துத் துடைத்திட எத்தனிப்பது, ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்குக் கேடு பயக்கும்
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.