மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என தேர்தல் முடிவை ஏற்கிறோம்: கருணாநிதி
சென்னை: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என தேர்தல் முடிவை ஏற்கிறோம் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
9 கட்டங்களாக நடந்த 16வது லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் 37 தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. மீதமுள்ள இரண்டு இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
நாற்பது தொகுதிகளிலும் வெற்றியைப் பெற வேண்டும் எனப் போராடிய திமுக இதுவரை ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.
இந்நிலையில், இத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் திமுக கட்சித் தலைவர் கருணாநிதி.
அதில் அவர், ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய அளவில் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள பாஜகவுக்கும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான மோடிக்கும் தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.