For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லாத்தையும் பேசிட்டு டப்புன்னு ஸாரி கேட்டு பல்டி அடித்த கருணாஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாஸ் பரபரப்பு பேச்சு

    சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

    முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது தி நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.

    Karunas ask apology for making some derogatory statement

    அவர் பேசுகையில் நீ கொலை கூட பண்ணு, அதை சொல்லிட்டு பண்ணு. அதில் நியாயம் இருக்கணும். என் ஜாதிக்காரன் மேலே கைய வச்சா கைய காலை உடைப்பேன். நீயா நானானு பார்க்க சட்டையை கழற்றிவிட்டு வா என்று ஏகத்துக்கும் அந்த அதிகாரியை ஒருமையில் பேசினார்.

    உனக்கு போதை ஏத்துனாதான் ஒருத்தனை அடிக்கவே தைரியம் வரும். நாங்களலாம் தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்துல கொலை செய்வோம் என்று மிரட்டும் தொனியில் பேசினார்.

    இதையடுத்து போலீஸாரை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் கருணாஸ். இதுகுறித்து அவர் கூறுகையில் வள்ளுவர் கோட்டத்தில் அறியாமல் பேசிவிட்டேன். பொறுமையை இழந்து நான் பேசியது வருத்தப்பட வேண்டிய விஷயம். ஊடகங்கள், செய்தித்தாள்கள் சில செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டினேன்.

    நான் பிற சமுதாயத்துக்கு எதிரானவன் அல்ல. சமுதாயவாதியாக இருப்பதால் சமுதாயத்தின் கோரிக்கைகளை முன் வைத்து பேசினேன். இது எந்தவகையிலாவது யாரையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இதுபோல் நடக்காது என்றார்.

    {document1}

    English summary
    MLA Karunas asks apology for making some derrogatory statement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X