கொலை வெறி பேச்சு... சிறையில் கருணாஸ்... ஜாமீன் கோரி மனு தாக்கல்
Recommended Video
சென்னை: காவல் துறை மற்றும் முதல்வருக்கு எதிராக மிரட்டும் தொனியில் பேசியதால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ கருணாஸ் சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாஸ் குறிப்பிட்ட ஒரு போலீஸ் அதிகாரியின் கை, காலை உடைத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
மேலும் முதல்வரே தான் அடித்து விடுவேன் என்ற பயத்தில் இருப்பதாகவும் மிரட்டும் தொனியிலும் அவர் பேசியிருந்தார். இதையடுத்து அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்துக்கு விடுப்பு என்பதால் கருணாஸுக்கு இன்று ஜாமீன் கோர முடிவு செய்தனர்.
அதன்படி கருணாஸின் வழக்கறிஞர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதுபோல் கடலூர் சிறையில் உள்ள முக்குலத்தோர் புலிகள் படை நிர்வாகி செல்வநாயகமும் ஜாமீன் கோரியுள்ளார்.
இவர்களது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை வரும் புதன்கிழமை வருகிறது.