For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான்தான் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை தேர்வு செய்தேன்... மறுக்க முடியுமா?... கருணாஸ் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    நான்தான் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை தேர்வு செய்தேன்...கருணாஸ்- வீடியோ

    சென்னை: நான்தான் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை தேர்வு செய்தேன் என்பதை உங்களால் மறுக்க முடியுமா என்று கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சென்னை சாலிகிராமத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 2009-ஆம் ஆண்டு சாலிகிராமத்தில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு தலைமை அலுவலகத்தை அமைத்தேன்.

    2018-ஆம் ஆண்டு செய்தியாளர்கள் ஒட்டுமொத்தமாக வந்துள்ளீர்கள். காவல் துறை அதிகாரியை அவதூறாக பேசியது சரியா என கேட்கிறீர்கள். ஒரு சராசரி மக்கள் இந்த கேள்வியை ஊடகத்தை பார்த்து கேட்டால் கூட அவர்கள் அறியாமையில் கேட்டதாக எடுத்துக்கலாம்.

    வீடியோவை பாருங்கள்

    வீடியோவை பாருங்கள்

    படித்த ஒரு ஊடகத்தின் நிருபராக இருக்கக் கூடிய நீங்கள் இப்படி ஒரு கேள்வியை கேட்டது எனக்கு வருத்தமாக இருக்கிறது. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் முழு வீடியோவை கேட்டிருந்தால் இந்த கேள்வியை என்னிடம் கேட்க மாட்டீர்கள்.

    தொண்டர்கள் மீதும் கிடையாது

    தொண்டர்கள் மீதும் கிடையாது

    47 நிமிடங்கள் நான் பேசியுள்ளேன். அந்த வீடியோவை முழுமையாக கேளுங்கள். கேட்டுவிட்டு இந்த கேள்வியை கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன். நான் 2009-ஆம் ஆண்டு முதல் அமைப்பு நடத்தி வருகிறேன். ஒரு 75 வழக்கு கூட வாங்கினது கிடையாது. என் தொண்டர்கள் மீதும் எந்த வழக்கும் இல்லை.

    மனைவியிடம் வருந்தினேன்

    மனைவியிடம் வருந்தினேன்

    இதை நான் ஊக்குவித்ததும் கிடையாது. இத்தனை வருடங்களாக பொதுக் கூட்டங்களை பேசி வருகிறேன். என்றைக்கும் ஒரு ஜாதிக்கு எதிராக கருத்து சொன்னது கிடையாது. இதுவரை எந்த கூட்டத்திலும் நான் ஒருமையிலும் பேசியது இல்லை. வள்ளுவர் கோட்டத்தில் நான் பேசியதற்காக என் மனைவியிடம் நான் வருத்தம் தெரிவித்தேன்.

    நிர்பந்திக்கவில்லை

    நிர்பந்திக்கவில்லை

    என்னமோ என்னை அறியாமல் நான் ஒருமையில் பேசிவிட்டேன் என வருந்தினேன். என்னை யாரும் வருத்தம் தெரிவிக்க நிர்பந்திக்கவில்லை. நானாகவே தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டேன். அந்த அளவுக்கு இந்த சமுதாயத்தில் ஒரு நடிகனாக , இசையமைப்பாளராக , தயாரிப்பாளராக, சட்டமன்ற உறுப்பினர் எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன.

    புகாருக்கு நடவடிக்கை இல்லை

    புகாருக்கு நடவடிக்கை இல்லை

    திட்டமிட்டு ஒரு அதிகாரி செய்யற தப்பை ஏன் அத்தனை அதிகாரிகளும் ஊக்குவிக்கிறார்கள். தவறு செய்த அதிகாரி மீது தண்டிக்காதது ஏன், உள்துறை செயலாளர் வரை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்.

    கருணாஸ் கேள்வி

    கருணாஸ் கேள்வி

    கூவத்தூர் விவகாரம் குறித்து தேவைப்பட்டால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பேன். சாதாரண தலைவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட எனக்கு வழங்கவில்லை. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை நான்தான் தேர்ந்தெடுத்தேன் என்று சொல்றேன். அதில் ஏதாவது தப்பு சொல்வீர்களா. நான்தான் ஓட்டு போட்டேன்ல்ல என்று கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    Karunas says that i have elected President of India. I too casted my vote for that election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X