நான் என்ன அப்படியா பேசினேன்.. போற போக்கில் எச். ராஜாவைப் பொளந்த கருணாஸ்!
சென்னையில் பேட்டியளித்த கருணாஸ் தன்னுடைய பேட்டியில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா குறித்தும் பேசி இருக்கிறார்.
Recommended Video
சென்னை: சென்னையில் பேட்டியளித்த கருணாஸ் தன்னுடைய பேட்டியில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா குறித்தும் பேசி இருக்கிறார்.
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் இன்று காலை சென்னையில் பேட்டியளித்தார். எனக்கு பாதுகாப்பு தேவையில்லை, என்னை பாதுகாக்க என் சமூகம் இருக்கிறது என்று கூறினார்.
யாரையாவது தவறாக பேசி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
என்ன சொன்னார்
இந்த நிலையில் இந்த பேட்டியில் கருணாஸ் ''பத்திரிக்கை விவகாரத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை கூறியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். யார் யார் எப்படி பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியும். காவல்துறை அதிகாரியை நேரடியாக நிறுத்தி எப்படி எல்லாம் பேசுகிறார்கள், நான் அப்படியா பேசினேன்.'' என்று கூறினார்.
எச்.ராஜா கிண்டல்
கருணாஸ் இந்த பேட்டியில் எச்.ராஜாவை நேரடியாக கிண்டல் செய்யவில்லை என்றாலும் கூட மறைமுகமாக அவரை பற்றி கருணாஸ் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. நான் ஒன்றும் போலீசுக்கு எதிரே நின்று திட்டவில்லை என்று கருணாஸ் கிண்டலாக கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு வைரலாகி உள்ளது.
எதிர்ப்பாக பேசுகிறார்
ஏற்கனவே கருணாஸ் அரசுக்கு எதிராக பேசியுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் எச்.ராஜாவிற்கு எதிராகவும் பேசி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பத்திரிக்கையாளர்களிடம் எச்.ராஜா போல சண்டை போடாமல், நீங்கள் எல்லாம் என் நண்பர்கள், நீங்கள் எனக்கு இருக்கிறீர்கள் என்று கூறி சமாதானப்படுத்தி இருக்கிறார்.
எச்.ராஜா பேச்சு
முன்னதாக எச்.ராஜா கடந்த வாரம் புதுக்கோட்டையில் அரசுக்கு எதிராகவும், நீதிமன்றத்துக்கு எதிராகவும் பேசினார். அவரது இந்த பேச்சு கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தது. ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.