For Daily Alerts
Just In
அரசியல் விரோதத்தால் என் மீது பொய் வழக்கு... முன்ஜாமீன் கோருகிறார் கருப்பசாமி பாண்டியன்
நெல்லையைச் சேர்ந்த திமுக பிரமுகர் நாலடியார் என்பவரின் மகள் தமிழரசி கருப்பசாமி பாண்டியன் மீது பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து கொலை மிரட்டல், ஆபாசமாகப் பேசுவது உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் கருப்பசாமி மீது குற்றாலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து கருப்பசாமி பாண்டியன் தலைமறைவாகி விட்டார். தற்போது அவரது சார்பில் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது.
அதில், திமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா மீது தலைமைக்கழகத்தில் புகார் செய்தேன். இந்த அரசியல் விரோதம் காரணமாக என் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Comments
karuppasamy pandian madurai hc advance bail கருப்பசாமி பாண்டியன் பாலியல் புகார் மதுரை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மதுரை
English summary
Nellai DMK secretary Karuppasamy Pandiyan has sought advance bail in a case against him. He has filed a petiton before Madurai bench of Madras HC.
Story first published: Thursday, September 19, 2013, 13:56 [IST]