ஊர் மக்கள் ஒன்று கூடி கொண்டாடிய பிரபாகரன் பிறந்த நாள்!
கரூர்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை பல்வேறு அரசியல் கட்சிகள் கொண்டாடிய நிலையில் கரூர் அருகே ஒரு கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடினர்.
நவம்பர் 26ம் தேதி பிரபாகரனின் 60வது பிறந்த நாளாகும். இதை மதிமுக, நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கொண்டாடினர்.
இந்த நிலையில், கரூர் அருகே மூக்கணாங்குறிச்சியில் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பிலும் அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பிலும் பிறந்த நாள் தின விழா கொண்டாடப்பட்டது.
பஞ்சாயத்து தலைவர் சிவசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் துணை தலைவர் ஆறுமுகம், தாமரைச்செல்வன், எழில் பசுமை, மர ஆர்வலர் ராமர் மற்றும் மூக்கணாங்குறிச்சி பஞ்சாயத்து பொதுமக்கள், அனைத்து தமிழ் அமைப்புகள் பலர் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களுக்குள் இனிப்புகளை பகிர்ந்து கொள்ள, மரக்கன்றுகள் ஆங்காங்கே நடப்பட்டது. 60 வது பிறந்த நாளை முன்னிட்டு 60 மரக்கன்றுகள் ஆங்காங்கே நடப்பட்டது.