கதிராமங்கலம் பிரச்சனை.. வரும் 9-ந் தேதிக்குள் தீர்வு காணாவிட்டால்.. பழ. நெடுமாறன் எச்சரிக்கை
கதிராமங்கலத்தில் பிரச்சனையில் வரும் 9ம் தேதிக்குள் தீர்வு காண வேண்டும் என்று பழ. நெடுமாறன் என வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர்: ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்சனையில் வரும் 9ம் தேதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் கோரியுள்ளார்.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி திட்டங்களுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், கதிராமங்கலம் பிரச்சனை தொடர்பாக அங்கு அனைத்துக் கட்சி கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களிடம், வரும் 9ம் தேதிக்குள் இந்தப் பிரச்சனை தொடர்பான 9ம் தேதிக்குள் தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.
மேலும், முறைப்படி தீர்வு காணப்படாவிட்டால் 10ம் தேதி முதல் போராட்டம் தொடரும் என்று நெடுமாறன் அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்பார்கள் எனவும் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.