உங்கள் எம்.எல்.ஏக்களை சட்டத்திற்குட்பட்டு கேள்வி கேளுங்கள்.. தமிழக மக்களுக்கு கட்ஜூ அழைப்பு
உங்கள் எம்..எல்.ஏக்களை சட்டத்திற்கு உட்பட்டு கேள்வி கேளுங்கள் என்று தமிழக மக்களுக்கு கட்ஜு அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை: இப்போது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அதிமுக எம்.எல். ஏக்கள் ஒரு நாள் வீடு திரும்பத்தான் வேண்டும். அப்போது நிச்சயம் மக்கள் அவர்களை சும்மா விட மாட்டார்கள். ஆனால் மக்கள் சட்டத்திற்கு உட்பட்டு, அமைதியான முறையில் அவர்களை கேள்வி கேட்க வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கட்ஜு வெளியிட்டுள்ள முக நூல் பதிவு:
சசிகலா கைப்பாவை எடப்பாடி பழனிச்சாமிக்கு என்னதான் எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுத்தாலும், தமிழர்கள் முட்டாள்கள் இல்லை என்பதை பழனிச்சாமி உணர வேண்டும்.
எனவே இந்த எம்.எல்.ஏக்கள் எப்போது வீடு திரும்பினாலும், கண்டிப்பாக மக்களின் கேலி, கிண்டல் கோபத்தை சந்தித்தாக வேண்டியிருக்கும்.
தமிழ் மக்களுக்கு நான் விடுக்கும் ஒரே வேண்டுகோள் - அதை அமைதியான முறையில் சட்டத்திற்கு உட்பட்டு செய்யுங்கள் என்று கூறியுள்ளார் கட்ஜு.