"இது" யார் என்று தெரிகிறதா.. கட்ஜு யாரை சொல்கிறார் புரிகிறதா??
சென்னை: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு போட்டுள்ள லேட்டஸ்ட் முகநூல் பதிவு ஆள் பெயரைக் குறிப்பிடாமல் பதிவாகியுள்ளது. ஆனால் சொல்லாமலேயே ஆள் யார் என்பதை பளிச்சென்று விளங்கிக் கொள்ள முடியும்.
நாட்டு நடப்பு, அரசியல் நிகழ்வுகள், சமூக அவலங்கள் குறித்து தொடர்ந்து கருத்து கூறி வருபவர் மார்க்கண்டேயே கட்ஜூ. தமிழக இளைஞர்கள்- மாணவர்களின் ஜல்லிக்கட்டுப் புரட்சியால் நெகிழ்ந்து போனவர் கட்ஜூ. அது முதல் தமிழகத்தின் மீதும் பாசம் அதிகரித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் ஒரு புதுப் பதிவைப் போட்டுள்ளார். பெயரெல்லாம் சொல்லவில்லை.. ஆனால் இதைப் புரிந்து கொள்ள பெயர் சொல்ல வேண்டிய தேவையே இல்லை.
கட்ஜூ பதிவு இதுதான்:
அமெரிக்காவபில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்படும் "காட்பாதர்கள்" அங்கிருந்தே தங்களது வேலைகளைச் செய்வது வழக்கம். அதேபோன்ற ஒரு விஷயம் தற்போது இந்தியாவிலும் "எங்கேயோ" நடந்து வருவது போலத் தோன்றுகிறது என்று கூறியுள்ளார் கட்ஜு.