மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை.. தொடரும் விலையேற்றம்!
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம் கண்டு இருக்கிறது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம் கண்டு இருக்கிறது. 16 பைசா வரை பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.
இந்த வருட தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. தினமும் ஒரு ரூபாய் என்று பெட்ரோல், டீசல் விலை மொத்தமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே சொல்கிறது.
சென்ற வாரம் வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.61, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.79 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதுள்ளது. இடையில் கர்நாடக தேர்தலுக்காக சுமார் 10 நாட்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
கடைசியாக 4 ரூபாய் உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது. இதுவரை பெட்ரோல், டீசல் விலை 10 பைசா முதல் 1 ரூபாய் வரை மட்டுமே உயர்த்தப்பட்டு வந்தது. இடையில் மொத்தமாக 4 ரூபாய் விலை உயர்ந்தது.
தற்போது இந்தியா முழுக்க நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்தது. தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.11 காசுகளாகும். டீசல் விலை 17 காசுகள் அதிகரித்துள்ளது.தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.91 காசுகளாகும். இது மக்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.