மூணாறில் இருந்து வந்த உதவிக்கரம்.. குரங்கணி மீட்புப்பணியில் களம் இறங்கிய கேரள போலீஸ்!
தேனி மாவட்டம் குரங்கணி விபத்து மீட்பு பணியில் தற்போது கேரளா போலீசும் களம் இறங்கி இருக்கிறது.
Recommended Video
தேனி: தேனி மாவட்டம் குரங்கணி விபத்து மீட்பு பணியில் தற்போது கேரளா போலீசும் களம் இறங்கி இருக்கிறது.
தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.
இந்தவிபத்தில் இது வரை 8 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 27 பேர் இதுவரை மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த மத்திய அரசு விமான படையை அனுப்பி இருக்கிறது. கோவை சூலூர் விமான படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளது.
தற்போது இவர்களுக்கு உதவியாக கேரளா போலீசும் களம் இறங்கி இருக்கிறது. கேரள எல்லை வழியாக மாணவிகள் காட்டிற்குள் வந்ததாக கூறப்படுகிறது.
ஆகவே தற்போது மூணார் டிஎஸ்பி தலைமையில் 10 பேர் கொண்டு குழு களம் இறங்கியுள்ளது. மத்திய படைக்கும், தமிழக படைக்கும் உதவியாக இவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.