For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள போலீஸார் துப்பாக்கிச் சூடு.. சென்னை விருகம்பாக்கத்தில் பரபரப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளா போலீசார் சென்னையில் துப்பாக்கிசூடு நடத்தியதால் பரபரப்பு- வீடியோ

    சென்னை: கேரள போலீஸார் விருகம்பாக்கத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மஹாராஜா. இவர் கேரளத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் அங்கு மோசடி செய்துவிட்டு மீண்டும் சென்னைக்கே தப்பி வந்துவிட்டார்.

    Kerala police gun shot on sky in Chennai Virugambakkam

    இதையடுத்து அவர் மீது அங்குள்ள மக்கள் புகார் அளித்தனர். இதன்பேரில் கேரள போலீஸார் வழக்கு பதிவு செய்து மஹாராஜாவை தேடி வந்தனர்.

    இந்நிலையில் அவர் விருகம்பாக்கத்தில் இருப்பதை அறிந்து அவரை கைது செய்ய வந்தனர். அப்போது அவரது உறவினர்கள் கைது செய்யக் கூடாது என்று தடுத்தனர்.

    மஹாராஜா நிதி மோசடி செய்தது குறித்து போலீஸார் உறவினர்கள் எடுத்துக் கூறியும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. இதனால் கேரள போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மஹாராஜாவை போலீஸார் அழைத்து சென்றனர். வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    Kerala police have come to Chennai Virugambakkam to arrest a youth who did chit fund scandal in Kerala, fires on sky.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X