அரங்கு நிறைந்த கூட்டத்தில் 'அலைபாயுதே' மாதவனிடம் இச் வாங்கும் குஷ்பு.. டிவி நிகழ்ச்சியால் சர்ச்சை
சென்னை: 'சிம்ப்ளி குஷ்பு' நிகழ்ச்சியில் நடிகர் மாதவனை பேட்டியெடுத்த குஷ்பு அவரிடம் முத்தம் பெறும் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'ஜி தமிழ்' தொலைக்காட்சியில் வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள 'சிம்ப்ளி குஷ்பு' என்ற நேர்காணல் நிகழ்ச்சிக்கான ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சி தொகுப்பாளரான குஷ்பு, தனது டிவிட்டர் தளத்திலும் இதை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோவை பார்த்து பல பெண்கள், பொறாமைப்பட போகிறார்கள் என்றும் 'பெருமிதம்' வெளிப்படுத்தியுள்ளார் குஷ்பு.
இதுக்குபேரு பொறாமையா?
தமிழக பெண்களை பொறாமைப்பட வைக்கும் வகையில் அப்படி என்ன செய்திருப்பார் என்று வீடியோவை பார்த்த பிறகுதான் தெரிகிறது, அது பொறாமைப்பட வைக்கும் நிகழ்ச்சியல்ல முகம் சுளிக்க வைக்கும் நிகழ்ச்சி என்பது.
பெண்களுக்கு இதுவா வேலை
திருமணமாகி தோளுக்கு மேல் வளர்ந்த குழந்தைகளுக்கு தாயான குஷ்பு, நடிகர் மாதவனிடம் முத்தம் வாங்குகிறாராம். இதற்குத்தான் பெண்கள் பொறாமைப்பட வேண்டுமாம். தமிழகத்து பெண்கள் அடுத்த ஆண்களிடம் முத்தம் வாங்குவதற்கு அலைவார்கள் என்ற அபிப்ராயம் குஷ்புவுடையது போலும்.
ஒருமையில் காதல் வசனம்
அந்த நிகழ்ச்சியில், அலைபாயுதே படத்தில் இடம்பெறும், வசனத்தை குஷ்புவை நோக்கி மாதவன் பேசுகிறார். "குஷ்பு நான் உன்ன விரும்பல, உன்மேல ஆசப்படல, ஆனா அதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு. யோசிச்சு சொல்லு" என்று அந்த வசனம் நீள்கிறது. இதை அந்த ரியாலிட்டி ஷோவில், ரொமான்ட்டிக் மூடுடன் குஷ்பு கேட்பது போல காட்சி உள்ளது. இதைப்பார்த்து அரங்கத்திலுள்ள ரசிகர்கள் ஆரவாரத்தோடு ரசிப்பது போலவும் காட்டுகிறார்கள்.
|
சர்ச்சை
குஷ்பு இந்த வீடியோவை ஷேர் செய்த தனது டிவிட்டிலும், உதடு, இதயம் சிம்பல்களை போட்டு ஏதேதோ சிக்னல் வேறு காண்பித்துள்ளார். ஏற்கனவே, விஜய்டிவி நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயனுக்கு இளம் பெண் ஒருவர் முத்தம் கொடுத்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.