குஷ்பு பொளேர்.. எச்.ராஜாவை ஒரே டிவிட்டில் காலி செய்தார்!
Recommended Video
சென்னை: எச்.ராஜா பெரியார் சிலையை அகற்றுவேன் என்று கூறியது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு டிவிட் செய்து இருக்கிறார்.
பாஜக கட்சி வெற்றிபெற்ற பின் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட்டு இருக்கிறது. இது இந்தியா முழுக்க சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
இந்த சர்ச்சை அடங்கும் முன் லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார். அவர் பதிவிட்ட கருத்து கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.
பல அரசியல் தலைவர்கள் இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் எச். ராஜா இந்த பதிவை நீக்கி இருக்கிறார்.
இதையடுத்து எச்.ராஜா குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு டிவிட் செய்து இருக்கிறார். அவர் ஆங்கிலத்தில் செய்து இருக்கும் இந்த டிவிட் மிகவும் மோசமான அர்த்தம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. குஷ்பு முதல்முறையாக வெளிப்படையாக இப்படி டிவிட் செய்துள்ளார்.