வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் .. இன்று முதல் மீண்டும் இயங்கும் கொச்சி ஏர்போர்ட்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் 15 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொச்சி ஏர்போர்ட் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
Recommended Video
கொச்சி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் 15 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொச்சி ஏர்போர்ட் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
கேரளாவில் கொட்டித்தீர்த்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.
கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கு கொச்சி விமான நிலையமும் தப்பவில்லை. விமான நிலையம் ஓடுதளம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விமான நிலையம் இழுத்து மூடப்பட்டது.
15ஆம் தேதி முதல்
கடந்த 9 ஆம் தேதி சில மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து 15 ஆம் தேதி முதல் விமான நிலையம் மூடப்பட்டது.
3 நாள் தள்ளி வைப்பு
இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி முதல் விமான நிலையம் மீண்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் போதுமான ஊழியர்கள் பணிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டதால் விமான நிலையம் மீண்டும் இயங்கும் தேதி 3 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ
இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணி மணி முதல் கொச்சின் சர்வதேச விமான நிலையம் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது. ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ விமான நிறுவனங்கள் இன்று முதல் சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளன.
சேவை தொடக்கம்
இண்டிகோ விமானம் பிற்பகல் 2 மணி முதல் தனது சேவையை தொடங்கியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் விமானம் கொச்சியிலிருந்து மும்பைக்கு இன்று பிற்பகல் 3.50 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் சேதம்
சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்கும் மிகப்பெரிய விமான நிலையம் கொச்சி விமான நிலையம். தற்போது ஏற்பட்ட வெள்ளத்தால் 60 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.