கொடநாடு கொலை வழக்கு... ஐவர் மீது குண்டர் சட்டம்: வீடியோ
கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரை குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் திவ்யா உத்தரவிட்டார்.
கோத்தகிரி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 24ஆம்தேதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் பலத்த காயமடைந்தார். மேலும் அங்கு கொள்ளையும் நடந்தது.
இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் 11 பேருக்கு இதில் தொடர்புள்ளது என கண்டறிந்தனர். அதில் முதன்மை குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் 10 பேரை போலீசார் கைது செய்து, சிறையிலடைத்துள்ளனர். அவர்களில் உதயகுமார், சதீசன், தீபு, மனோஜ், குட்டி ஆகிய ஐவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் திவ்யா உத்தரவிட்டார். அதனையடுத்து அவர்கள் 5 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை மற்றும் கொள்ளை சம்பந்தமாக நிறைய வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.