For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம் அணுஉலையில் பழுது காரணமாக 1000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு!

கூடங்குளம் அணுஉலையில் பழுது காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

நெல்லை: கூடங்குளம் இரண்டாவது அணுஉலையில் வால்வு பழுது காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், கூடங்குளம் இரண்டாவது அணுஉலையில் கடந்த ஜூன் மாதம் 26 ந்தேதி வால்வு பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்பு மே 28 ஆம் தேதி பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டது.

Koodankulam second nuclear plant has been affected by the technical problem

படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ஜூன் 29 ந்தேதி 1000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியது. அதில் இருந்து இன்று வரை 36 நாட்கள் தொடர்ந்து 1000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று வால்வு பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பழுது சரி செய்யப்பட்டு இரண்டு அல்லது மூன்று தினங்களில் மீண்டும் மின்னுற்பத்தி துவங்கும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு அணுஉலைகளும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து எந்தவித மின் உற்பத்தியும் தற்போது இல்லை. முதலாவது அணுஉலை கடந்த ஏப்ரல் 13 ந்தேதி எரிபொருள் நிரப்பும் பணிக்காக நிறுத்தப்பட்டு, இன்று வரை மின் உற்பத்தி செய்யப்படாமல் இருப்பது கூறிப்பிடத்தக்கது.

English summary
Koodankulam second nuclear plant has been affected by the technical problem. Due to technical problem in the nuclear plant power generation stopped.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X