எஸ்.வி. சேகரை காணவில்லை.. துண்டு பிரசுரங்கள் விநியோகித்த கோவை பத்திரிகையாளர்கள்!
எஸ்.வி.சேகரை கண்டுபிடித்து தருமாறு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
Recommended Video
கோவை: பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய எஸ் வி சேகரை காணவில்லை எனவும், தேடப்படும் குற்றவாளியாக இருப்பதாகவும் இவரை நேரில் பார்த்தால் உடனடியாக கோவை மாவட்ட காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும், துண்டு பிரசுரங்களை கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசியதாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த எஸ்.வி சேகர் மீது, சென்னையில் மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இவரை கைது செய்ய நீதிமன்றமும் வலியுறுத்தி உள்ளது. ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் எஸ் வி சேகர் தேடப்படும் குற்றவாளியாக இருப்பதாகவும் எனவே இவரை நேரில் பார்த்தாலோ, அல்லது இவர் இருக்கும் இடம் தெரிந்தாலோ, உடனடியாக கோவை மாநகர காவல் துறை ஆணையாளர், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவுக்கும் படி தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கோவையின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகித்தனர். துண்டு பிரசுரத்தில் காவல் துறை அதிகாரிகளின் தொடர்பு எண்களும் குறிப்பிடப்பட்டு உள்ளது.