சசி அணியில் இருந்து கோவை வடக்கு எம்.எல்.ஏ. அருண்குமார் எஸ்கேப்- எடப்பாடி பலம் 122 ஆக குறைந்தது!
சசி அணியில் இருந்து வெளியேறிய கோவை வடக்கு மாவட்ட எம்எல்ஏவான அருண்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளார்.
கோயம்புத்தூர்: சட்டசபையில் இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை கோவை வடக்குமாவட்ட எம்எல்ஏவான அருண்குமார் புறக்கணித்துள்ளார். 10 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கூவத்தூரில் இருந்து வெளியேறி அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
சசிகலா ஆதரவு அணியில் இருந்த கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளார். தலைமையின் முடிவு பிடிக்காததால் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக தெரிவித்த்துள்ளார்.
10 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கூவத்தூரில் இருந்து எம்எல்ஏ அருண்குமார் வெளியேறினார். மக்கள் மற்றும் தொண்டர்களின் கருத்தைக் கேட்டு செயல்படவுள்ளதாக எம்எல்ஏ அருண்குமார் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளர் பதவியையும் அருண்குமார் ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 122ஆக குறைந்துள்ளது.