For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ, நெடுமா கெளம்பிட்டாங்க டீமா.. போயஸு காலை தொட்டு... வைரலாகும் கோவனின் அதிரடி பாட்டு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தனித் தமிழீழம் அமைய தாம் உதவுவேன் என திருச்சியில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் ஈழ நிலைப்பாடு, அவருக்கான வைகோ, நெடுமாறன், சீமானின் ஆதரவு ஆகியவற்றை விமர்சிக்கும் பாடகர் கோவனின் பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மூடு டாஸ்மாக்கை மூடு.. பாடலைப் பாடியதால் தேச துரோக சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் கோவன். அவருக்காக ஒட்டுமொத்த நாடே ஆதரவு குரல் கொடுத்தது. அவர் மீதான தேசதுரோக வழக்கை நீதிமன்றமே ரத்து செய்தது.

இதனிடையே திருச்சியில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா, இலங்கையில் தனித் தமிழீழம் அமைய உதவுவேன்; தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தமது அரசின் நிலைப்பாடு என உறுதியளித்திருந்தார். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பை உடனே தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வரவேற்று அறிக்கை கொடுத்திருந்தார்.

Kovan's song on Jayalalithaa's Pro Eelam stand

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பாடகர் கோவனின் பாடல் ஒன்று நேற்று முதல் வைரலாக பரவி வருகிறது. அந்த பாடல் ஜெயலலிதாவின் திருச்சி உரை, நெடுமாறனின் வரவேற்பைத் தொடர்ந்து வெளியிடப்பட்டதா? அல்லது முன்னர் எப்போதோ பாடப்பட்டதா? என்பது அதில் தெளிவாக இல்லை.

ஆனால் ஜெயலலிதாவின் ஈழ ஆதரவு நிலைப்பாடு, வைகோ, நெடுமாறன், சீமான் ஆகியோரின் ஜெயலலிதாவின் ஈழ ஆதரவுக்கு பாராட்டு ஆகியவற்றை விமர்சிக்கிறது அந்த பாடல்.

பாடல் விவரம்:

வைகோ...நெடுமா......சீமா......கெளம்பிட்டாங்க டீமா
போயஸு காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்கிகிட்டு
ஈழம் தனி ஈழம்னு கூவலாமா? தமிழனை இளிச்சவாயனாக்கலாமா? என்று ஆரம்பித்து

தின்ன களிவாசம் மறந்து போச்சா.....? உன்னை நம்பி வரும் தமிழனுக்கு சொல்லு ராசா....

கொல்ல வாரான் புலியின்னு கிளப்பிவிட்டு
நரிக்குறவரையும் புலியின்னு பிடிச்சுபோட்டு
புலியோட தலைவரையே போடவேணும் தூக்குலன்னு
தூக்கத்துலயும் எந்திரிச்சு கத்துனாரே...
நீங்க தூக்கிவெச்சு ஆடுறது எதனாலே?

ஆதரவு தேடிவந்த அகதிகளைத்தான்
அடைச்சு வெச்சார் முள்ளுகம்பி வேலியில
ஆறுமணி ஆனாலே அடைய வேணும் கேம்புக்குள்ளே
போலீசு தொந்தரவு கொஞ்சம் இல்ல அட
இத்தனையும் ஈழத்தாய் செஞ்ச வேல...

ஈழ ஆதரவு வேஷம் போட்டு எதிர்ப்புன்னு கோஷம் போட்டு
ஆட்டய போடுது கன்னிங் லேடி
இதுக்கு ரூட்டு போட்டு தாராராம் நாலு தேங்கா மூடி என்று போகிறது இந்தப் பாடல்.

English summary
Makkal Athikaram movement Singer Kovan's song on against Jayalalithaa's Pro Eelam stand going viral in social Media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X