For Daily Alerts
Just In
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தொடங்கியது வணிக ரீதியிலான உற்பத்தி
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நள்ளிரவு முதல் வணிக ரீதியிலான உற்பத்தி தொடங்கியது.
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்குகிறது. நள்ளிரவு 12 மணி முதல் வணீக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடங்குளத்தில் பராமரிப்புக்குப்பின் டிசம்பர் 7 இல் மின் உற்பத்திமீண்டும் தொடங்கியது. முதல் அணுஉலையில் மின் உற்பத்தி ஆயிரம் மெகாவாட்டை எட்டியுள்ளது. 1000 மெகாவாட்டை எட்டியதையடுத்து வணீக ரீதியில் உற்பத்தி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு உற்பத்தியாகும் 1000 வாட் மின்சாரத்தில் 562 மெகா வாட் மின்சாரம் தமிழகத்துக்கும் மீதியை கர்நாடகா ,கேரளா ,பாண்டிச்சேரிக்கு பிரித்து வழங்கப்படும் என்று கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Kudangulam Nuclear power plants next section started commercially…
Story first published: Wednesday, December 31, 2014, 11:03 [IST]