கூடங்குளம் அணு உலைகளில் 2000 மெகாவாட் மின் உற்பத்தி.. வளாக இயக்குனர் தகவல்
கூடங்குளத்தில் அமைந்துள்ள இரு அணு உலைகளில் இருந்து 2000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக வளாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நெல்லை: கூடங்குளத்தில் அமைந்துள்ள இரு அணு உலைகளில் இருந்து 2000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக வளாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைந்துள்ள இரு அணுஉலைகளில் இருந்து 2000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் இருந்து அணுஉலைகள் மூலம் 2000 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெறுவது நாட்டிலேயே இதுவே முதன்முறை.
இரண்டாவது அணுஉலை கடந்த மாதம் 30ந்தேதி தொழிற் நுட்ப கோளாறு காரணமாக மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. கோளாறு சரி செய்யப்பட்டு 01.12.17 அன்று காலை மீண்டும் மின்னுற்பத்தி துவங்கியது.
முதலில் 300 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வந்தது படிப்படியாக மின்னுற்பத்தி உயர்த்தப்பட்டு இன்று அதிகாலை 3.30 மணி முதல் 100 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வருவதாகவும் முதலாவது அணுஉலையில் 29.08.17 முதல் 1000 மெகாவாட் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
முதலாவது அணுஉலையில் இருந்து இதுவரை 20,863 மில்லியன் யூனிட் மின்சாரமும் இரண்டாவது அணுஉலையில் இருந்து 4784 மில்லியன் யூனிட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாகவும் வளாக இயக்குனர் ஜின்னா தெரிவித்துள்ளார்.