For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின்சார உற்பத்திக்கு தயாராகும் கூடங்குளம் 2-வது அணு உலை!

Google Oneindia Tamil News

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலை மின்சார உற்பத்திக்கு தயாராகி வருகிறது. இந்த அணு உலையில் அடுத்த வாரத்துக்குள் மின் உற்பத்திக்கான அணு பிளவு சோதனை நடத்தப்பட உள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணு உலை கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி மின்சாரத்தை உற்பத்தி செய்ய தொடங்கியது.

Kudankulam second unit to undergo criticality test

முதன் முதலாக 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அபிஷேகப்பட்டியில் உள்ள மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது. எனினும் பராமரிப்பு பணிக்காக அணு மின் உலை அவ்வப்போது நிறுத்தப்பட்டு பின்னர் இயக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 22-ந் தேதி முதல் அணு உலை தொடர்ந்து இயங்கி வருகிறது. முதல் அணு உலை தொடர்ந்து இயங்கி வருவதை அடுத்து 2-வது அணு உலையிலும் மின்சார உற்பத்தியை தொடங்க கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி கடந்த மாதம் 18-ந் தேதி நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து உயர் வெப்ப அழுத்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை முடிவுகளை தொடர்ந்து கடந்த 10-ந் தேதி பாதுகாப்பு வால்வுகளை திறந்து நீராவியை வெளியேற்றும் சோதனை நடந்தது.

இந்த சோதனை 21-ந் தேதி காலை நிறைவடைந்தது. இதையடுத்து 2-வது அணு உலையில் அணு பிளவு சோதனை நடத்துவதற்காக இறுதி கட்ட பணியில் இந்திய-ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை வாரியத்தின் அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அனுமதி கிடைத்தவுடன் 2-வது அணு உலையில் மின் உற்பத்திக்காக அணு பிளவு ஏற்படுத்தப்படும். இந்த மாத இறுதிக்குள் அணு பிளவு சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The unit-II of the multi-crore Kudankulam Nuclear Power Project (KNPP) in Tamil Nadu is prepared for a criticality test next week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X