For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கள்ளக்காதலுக்காக 30ம் தேதி இரவு முதல் 1ம் தேதி அதிகாலை வரை வெறியாட்டம் ஆடிய அபிராமி!

கள்ளக்காதலுக்காக 30 ஆம் தேதி இரவு முதல் ஒன்றாம் தேதி அதிகாலை வரை இரண்டு குழந்தைகளை கொன்று வெறியாட்டம் ஆடியுள்ளார் அபிராமி.

Google Oneindia Tamil News

Recommended Video

    2 நாட்கள் வெறியாட்டம் ஆடிய அபிராமி | 15 நாள் நீதிமன்றக் காவல்- வீடியோ

    சென்னை: கள்ளக்காதலுக்காக 30 ஆம் தேதி இரவு முதல் ஒன்றாம் தேதி அதிகாலை வரை இரண்டு குழந்தைகளை கொன்று வெறியாட்டம் ஆடியுள்ளார் அபிராமி.

    குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளையில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் விஜய்(30). தனியார் வங்கியில் வீடுகள் வாங்க கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி அபிராமி(25), இவர்களுக்கு திருமணம் ஆகி அஜய் என்ற 7 வயது மகனும் கார்னிகா என்ற 4 வயது மகளும் இருந்தனர். அஜய் 2ஆம் வகுப்பு படித்து வந்தார்.

    உல்லாசம்

    உல்லாசம்

    இந்நிலையில் அப்பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரத்துடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் சுந்தரத்தை அழைத்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் அபிராமி.

    தகராறு

    தகராறு

    இந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரிய வரவே அபிராமியை கண்டித்துள்ளனர். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை

    குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை

    இந்நிலையில் சுந்தரத்துடன் நிரந்தரமாக வாழ முடிவு செய்த அபிராமி இரண்டு குழந்தைகளையும் குடும்பத்தினரையும் கொல்ல முடிவு செய்தார். தனது முடிவு குறித்து கள்ளக்காதலன் சுந்தரத்திடம் கூறிய அபிராமி அவரது ஆலோசனைப்படி கடந்த 30ம் தேதி இரவு இரண்டு குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரை கொடுத்துள்ளார்.

    மூச்சை நிறுத்தி கொலை

    மூச்சை நிறுத்தி கொலை

    இதில் குழந்தை கார்னிகா மட்டும் இறந்துள்ளார். மறுநாள் காலையில் மகன் அஜயும் கணவர் விஜயும் எழுந்துவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அபிராமி கணவன் வேலைக்கு சென்ற பிறகு மீண்டும் பாலில் விஷத்தை கலந்து கொடுத்து மகனின் மூச்சை நிறுத்தி கொலை செய்தார்.

    கணவர் அதிர்ச்சி

    கணவர் அதிர்ச்சி

    கணவரை கொலை செய்ய சுமார் 12 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்தும், அது முடியாமல் போனதால் 1ஆம் தேதி அதிகாலை அங்கிருந்து தப்பினார். மறுநாள் கணவர் விஜய் வீட்டிற்கு வந்தபோது இரண்டு குழந்தைகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசில் தகவல் தெரிவித்தார்.

    வெறியாட்டம்

    வெறியாட்டம்

    போலீசார் கள்ளக்காதலன் சுந்தரத்தின் மூலம் தப்பியோடிய அபிராமியை நாகர்கோவிலில் வைத்து கைது செய்தனர். கள்ளக்காதலுக்காகவும் காம வெறிக்காகவும் 30 ஆம் தேதி இரவு முதல் 1 ஆம் தேதி அதிகாலை வரை கொலை வெறியாட்டம் ஆடியுள்ளார் அபிராமி.

    நீதிமன்ற காவல்

    நீதிமன்ற காவல்

    இந்நிலையில் கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற அபிராமியை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    English summary
    Chennai Kundrathur Abirami was Maniac from 30th night to early morning of september first morning for illicit love. Abirami kills her two children for illicit love.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X