For Daily Alerts
Just In
குரங்கணி காட்டுத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21ஆக உயர்வு.. சிகிச்சைப் பெற்ற பார்கவி பலி
குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி மலைப்பகுதியில் கடந்த மார்ச் 11-ம் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த விபத்தில், அங்கு மலையேற்றத்திற்கு 9 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 27 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் காட்டுத்தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. இந்நிலையில் சென்னையில் சிகிச்சை பெற்ற பார்கவி என்ற பெண் உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.
Comments
kurangani forest fire fire accident death increased குரங்கணி காட்டுத் தீ தீ விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை
English summary
Kurangani fire accident death toll increased as 21. Bargavi passes away.
Story first published: Monday, March 26, 2018, 19:06 [IST]