For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குரங்கணி காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு.. உடுமலையை சேர்ந்த சிவசங்கரி உயிரிழப்பு

குரங்கணி காட்டுத் தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: குரங்கணி காட்டுத் தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிவசங்கரி என்பவர் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ட்ரெக்கிங் சென்ற 36 பேர் சிக்கிக் கொண்டனர்.

Kurangani fire accident death toll increased as 22

இவர்களில் பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தீக்காயம் அடைந்தவர்கள், மதுரை, கோவை மற்றும் சென்னை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 12 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சிவசங்கரி என்ற 26 வயது இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து குரங்கணி தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

English summary
Kurangani fire accident death toll increased as 22. Udumalpet Sivasangari is died in Hospital. Theni district kurangani forest fire happened last month 11th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X