குற்றத்தை வேடிக்கை பார்ப்பதும் குற்றம்தான்.. ஸ்வாதி கொலையைத் தடுக்காதோர் மீது குஷ்பு ஆவேசம்
சென்னை: குற்றம் செய்வது மட்டும் குற்றமல்ல. மாறாக ஒரு குற்றச் செயல் நடப்பதை தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்ப்பதும் கூட குற்றம்தான் என்று நடிகை குஷ்பு ஆவேசமாக கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் பெண் ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட கோரச் சம்பவம் பெரும் பரபரப்பையும், விவாதங்களையும் எழுப்பியுள்ளது. பலரும் இந்த கொடும் செயலுக்கு அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
அதை விட முக்கியமாக சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் இருந்த யாருமே கொலையாளியைத் தடுக்கவோ, பிடிக்கவோ முயலாமல் அமைதியாக இருந்ததுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகை குஷ்புவும் தனது டிவிட்டர் பக்கத்தில் குமுறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஒரு குற்றச் செயலுக்கு நாம் சாட்சியாக இருக்கிறோம் என்றால் நிச்சயம் அந்த வேடிக்கை பார்த்தலும் கூட குற்றச் செயல்தான். யாராவது சிலர் முன்வந்து அந்தக் கொலைகாரனைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்' என தனது ஆதங்கத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
Wen u r a witness 2 a crime n u keep quite abt it,u r equally responsible 4 d crime..wish sum1 cud hve cme 4wrd n spkn abt d killer #swati
— khushbusundar (@khushsundar) June 25, 2016