அய்யோ.. நீங்க ரொம்பக் கஷ்டப்பட வேண்டாம்... தன்னைப் பற்றிக் கவலைப்பட்டவருக்கு குஷ்பு கொடுத்த பதில்!
சென்னை: திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்தது தொடர்பாக டிவிட்டரில் நடிகை குஷ்பு குறித்து ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். அதில், பேசாமல் திமுகவிலேயே குஷ்பு இருந்திருக்கலாம். சீட்டாவது கிடைத்திருந்திருக்கும் என்று அவர் கூற, உங்களுக்கு எதுக்குங்க கவலை என்று குஷ்பு பதிலளித்துள்ளார்.
திமுக, காங்கிரஸ் கூட்டணி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பாஜக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணியை வைத்து டிவிட்டரில் குஷ்புவை ஒருவர் சீண்டியுள்ளார். அதற்கு குஷ்புவும் ஜாலியாக பதிலளித்துள்ளார்.
திமுகவிலிருந்து காங்.குக்கு வந்த குஷ்பு
குஷ்பு முன்பு திமுகவில் இருந்தவர். அங்கு பிரச்சினை ஏற்படவே கட்சியை விட்டு விலகினார். காங்கிரஸுக்கு வந்து சேர்ந்தார்.
வந்து சேர்ந்த வேகத்தில்
வந்து சேர்ந்த வேகத்தில் தமிழக காங்கிரஸ் தலைமையின் நல்லெண்ணத்தைப் பெற்று செயல்பட்டு வருகிறார். வரும் தேர்தலில் அவர் ஈரோடு அல்லது சென்னையில் போட்டியிடலாம் என்று பேச்சு வேறு அடிபடுகிறது.
|
அய்யா பாவம்
இந்த நிலையில் திமுகவும், காங்கிரஸும் மீண்டும் கூட்டணி வைத்துள்ளது குறித்து ஸ்ரீதரன் என்பவர் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், குஷ்பு நிலை மோசம். அவர் திமுகவிலேயே இருந்திருந்தால், ஒரு சீட்டாவது கிடைத்திருக்கும். இப்போது எல்லாம்
போச்சு என்று கூறியுள்ளார்.
|
அய்யோ.. உங்களுக்கு ஏங்க கஷ்டம்
அதற்கு குஷ்பு, அய்யோ. ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். எனது நிலை என்ன நான் எங்கே இருக்கிறேன் என்று எனக்கு தெரியும். உங்களது கவலைக்கு நன்றி என்று கூறியுள்ளார் குஷ்பு.