குற்றாலம் சீசன் “ஸ்டார்ட்ஸ்” - 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
குற்றாலம்: குற்றால சீசன் தொடங்குவதை முன்னிட்டு 50 சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு சேவை தொடங்கியது.
உலகில் அனைத்து வகை சரும நோய்களை தீர்க்கும் மூலிகைகள் நிறைந்து காணப்படும் மேற்குத்தொடர்ச்சி மலை தமிழகத்தில் உள்ள குற்றாலத்தில் நிறைந்து காணப்படுகிறது.
தீராத நோய்களை தீர்க்கும் இந்த வனம் அனைத்தும் மூலிகைகள் நிறம்பபெற்றபகுதியாகும்,இங்குள்ள அருவிநீர் மூலிகைகளில் பட்டு தெறித்து அருவியாக கொட்டுவதால் இங்கு குளிக்க ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்,ஆகிய மாதங்களில் இலட்சக்கணக்கானோர் வந்து நீராடி செல்வது வழக்கம்.
அடுத்த மாதம் சீசன் தொடங்க உள்ள நிலையில் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் நலனை கருத்தில் கொண்டும்,திருட்டுக்களை தடுக்கும் பொருட்டும்,அருவியில் ஏற்படும் வெள்ளபெருக்கில் பயணிகள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு மைக் மூலம் அறிவிப்பு செய்ய வசதியாக குற்றாலம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் 50 சி.சி.டி.வி.கேமரா பொருத்தப்பட்டு இன்று முதல் அவை செயல் பாட்டிற்கும் வந்துள்ளது.