கோவையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி.. செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது தவறி விழுந்த பரிதாபம்
கோவையில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
கோவை: கோவையில் செப்டிக் தொட்டிக்குள் தவறி விழுந்த துப்புரவு பணியாளர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை 100 அடி சாலையில் மலையாள சமாஜ் எதிர்புறம் உள்ள வீட்டில் செப்டிக் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக தொட்டிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, மகேந்திரன் தொட்டிக்குள் விழுந்தது தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த வீட்டில் இருந்தவர்கள், மகேந்திரனை உடனே தொட்டிக்குள் இருந்து மீட்டனர். ஆனால் சம்பவ இடத்திலேயே மகேந்திரன் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இரத்தினபுரி காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.