கன்னத்தில் தட்டியதற்கு ஆளுநரின் மன்னிப்பை ஏற்கிறேன்... ஆனால்... பெண் நிருபர் லட்சுமி
கன்னத்தில் தட்டியதற்கு ஆளுநரின் மன்னிப்பை ஏற்கிறேன், ஆனால் அவரது விளக்கத்தை ஏற்க முடியாது என்று பெண் நிருபர் லட்சுமி தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: கன்னத்தில் தட்டியதற்கு ஆளுநரின் மன்னிப்பை ஏற்கிறேன், ஆனால் அவரது விளக்கத்தை ஏற்க முடியாது என்று பெண் நிருபர் லட்சுமி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார் ஆளுநர். அப்போது ஒரு பெண் நிருபர் லட்சுமி சுப்பிரமணியன் ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக பெண்ணின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தார். இதனால் அந்த பெண் வருத்தப்பட்டதாக ஆளுநரின் டுவிட்டருக்கு தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பெரிதானதை அடுத்து ஆளுநர் அந்த பெண் நிருபரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Your excellency I accept your apology even though I am not convinced about your contention that you did it appreciate a question I asked https://t.co/NNs13wNqNE
— Lakshmi Subramanian (@lakhinathan) April 18, 2018
பணியை பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டி கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.இதையடுத்து ஆளுநரின் மன்னிப்பை தான் ஏற்பதாகவும், ஆனால் தன்னை பாராட்டுவதற்காக தட்டினேன் என்ற அவரது விளக்கத்தை ஏற்க முடியாது என்று லட்சுமி சுப்பிரமணியன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.