வேலூரில் பச்சிளம் குழந்தையை கோவிலில் வீசிய படுபாதக தாய் – குழந்தை மீட்பு
வேலூர்: வேலூரில் பச்சிளம் குழந்தையை தாயே கோவிலில் போட்டுவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், ரத்தினகிரி அருகேயுள்ள அரப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஓம்சக்தி கோவில் அருகே பச்சிளம் குழந்தை அழுதுக்கொண்டு கிடப்பதை அந்த பக்கம் சென்ற அந்த ஊர்க்காரர்கள் பார்த்து அதிர்ச்சியாகினர்.
பிறந்து பத்து நாட்களே ஆன அந்த குழந்தையை தூக்கிய அந்த கிராமத்து பெரியவர்கள் அழும் குழந்தைக்கு பால் தந்தும் அழுகையை நிறுத்தியது.
குழந்தை அநாதையாக வீசி சென்றது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். அதன்படி சமூகநலத்துறை அதிகாரிகள் வந்து குழந்தையை வாங்கி சென்றனர்.
அந்த குழந்தையை பாதுகாத்து, வளர்க்கும் பொருட்டு அதனை மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் திருப்பத்தூர் எஸ்.ஆர்.டி.பி.எஸ் குழந்தைகள் சிறப்பு தத்தெடுப்பு நிறுவன இயக்குநர் தமிழரசியிடம் ஒப்படைத்தார்.
கோவில் முன்பு குழந்தையை வீசி பெற்ற படுபாதக தாய் யார் என போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.