ஜெயேந்திரரின் உடல் நாளை காஞ்சியில் நல்லடக்கம்
ஜெயேந்திரரின் உடல் நாளை காஞ்சிபுரத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
Recommended Video
காஞ்சிபுரம்: ஜெயேந்திரரின் உடல் நாளை காஞ்சிபுரத்தில் உள்ள மகாசுவாமிகள் பிருந்தாவனத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
காஞ்சி சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரருக்கு இன்று காலை மூச்சுதிணறல் ஏற்பட்டது. அவர் உடனடியாக காஞ்சி சங்கர மடத்துக்கு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அங்கிருந்து சங்கர மடத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சங்கரமடத்தில் உள்ள மகாசுவாமிகள் பிருந்தாவனத்தில் ஜெயேந்திரரின் உடல் நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என்று காஞ்சி மடம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காஞ்சி சங்கர மடத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் ஜெயேந்திரர் உடலுக்கு விடிய விடிய மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயேந்திரர் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது. காலையில் மகா சுவாமிகள் பிருந்தாவனத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. சாலக்கிராம கல் வைத்து அபிஷேகம் செய்யப்படும் என்றனர்.