மதுபோதையில் மரணித்த தேவதைகள் திவ்யபாரதியும் ஸ்ரீதேவியும்
ஸ்ரீதேவி மாரடைப்பில் மரணம் என்று கூறிய தகவல் இப்போது மதுபோதையில் மரணித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: நடிகை திவ்யபாரதியைப் போலவே நடிகை ஸ்ரீதேவியும் மது போதையில் தடுமாறி உயிரிழந்துள்ளார். திவ்யபாரதி மாடியில் இருந்து கீழே விழுந்து மரணித்தார். ஆனால் ஸ்ரீதேவியோ குளியறையில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
இந்தி நடிகை திவ்யபாரதி மரணம் விபத்து என்று ஊத்தி மூடப்பட்டது. நடிகை ஸ்ரீதேவியின் மரணமும் விபத்து என்று தடயவியல் அறிக்கை கூறுகிறது.
ஸ்ரீதேவியைப் போல அழகும் இளமையும் கொண்ட திவ்யபாரதி தமிழில் நிலாப்பெண்ணே படத்தில் அறிமுகமானார் தமிழகம் வரவேற்காவிட்டாலும் தெலுங்கு திரை உலகம் கை கொடுத்தது. கூடவே பாலிவுட்டும் அரவணைத்துக்கொண்டது.
19 வயதில் மரணமடைந்த தேவதை
1993ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதியன்று இரவு 11.45மணிக்கு திவ்யபாரதி தான் குடியிருந்த அபார்ட்மெண்ட்டின் பால்கனியிலிருந்து தவறி விழுந்து இறந்ததாக செய்திகள் வெளியானது. பிரேத பரிசோதனையில் அவரது வயிற்றில் மூன்று பெக் அளவுக்கு மொரிஷியன் ரம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திவ்யபாரதியின் மரணம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
போதையில் விபத்து
திவ்யபாரதி அவரது தாயை எதிர்த்து சாஜித் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். திவ்யபாரதி இறந்தபோது அவரது வீட்டிலிருந்த அவரது பியூட்டிஷியன் மற்றும் பியூட்டிஷியனின் கணவர் ஆகியோர் மீதும் சந்தேகம் எழுந்தது. திவ்யபாரதி தற்கொலை செய்து கொண்டார் என்றும் தகவல் வெளியானது.
பின்னர் அது விபத்துதான் என்று அந்த தேவதையின் மரணம் பின்னர் முடித்து வைக்கப்பட்டது.
ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி பாலிவுட் பட உலகில் கோலோச்சிய தருணம் அது. ஸ்ரீதேவி போலவே ஒரு தென்னகத்து தேவதை பாலிவுட்டிற்கு கிடைத்திருக்கிறார் என்று ஊடகங்கள் எழுதின. ஆனால் 19 வயதிலேயே மரணமடைந்தார் திவ்யபாரதி. 25 ஆண்டுகள் கழித்து ஸ்ரீதேவியின் மரணமும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
குளியல் அறையில் மரணம்
நடிகை ஸ்ரீதேவி துபாயில் நேற்று மரணமடைந்த நிலையில், அவர் கார்டியாக் அரெஸ்ட் தாக்கி இறந்ததாக முதல்கட்டமாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் துபாயில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வுக்கு பிறகு வெளியான அறிக்கையில் அவர் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டுள்ளது.
போதையில் மரணமா?
அதேநேரம், அவரது உடலில் ஆல்கஹால் பட்டிருந்ததற்கான தடயங்கள் சேகரிக்கப்பட்டதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதான் விபத்துக்கு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உடல்கூறு ஆய்வு முடிவுகளிலும் ஸ்ரீதேவி, உடலில் ஆல்கஹால் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்ரீதேவி மது போதையில் இருந்ததை உறுதி செய்துள்ளன.
மரணத்தில் சர்ச்சை
ஸ்ரீதேவிக்கு இதயமுடக்கம், மாரடைப்பு என்று முன்பு தகவல் வெளியானது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் கார்டியாக் அரெஸ்ட் பற்றி குறிப்பிடவில்லை. தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்துள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை திவ்யபாரதியின் மரணத்தில் இருந்த மர்மம் போலவே ஸ்ரீதேவியின் மரணத்திலும் விடை தெரியாத பல கேள்விகள் எழுந்துள்ளன.