கன மழை.. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா?
சென்னை: கன மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் முழுமையாகவும், பகுதியாகவும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறையாகும். தேனி மாவட்டத்தில் போடி, உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கன மழையால் தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக இன்று காலை, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக, நெல்லை மாவட்டத்தை பொறுத்தளவில், தென்காசி, செங்கோட்டை, கடயநல்லூர், சிவகிரி, வி.கே புதூர், ஆலங்குளம், அம்பை, சேரன் மகாதேவி ஆகிய மேற்கு மாவட்ட பகுதி கல்வி கோட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.