குழப்ப பார்க்கிறார்கள்.. போராட்டத்தை கைவிடாதீர்கள்.. சிம்பு பரபர கோரிக்கை
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தை கைவிடாதீர்கள் என நடிகர் சிம்பு கோரிக்கைவிடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றுவிட்டதாகவும், மாணவர்கள் போராட்டத்தை கைவிடலாம் என்றும் ஜல்லிகட்டு ஆதரவாளர்கள் இன்று பேட்டியளித்த நிலையில், உடனடியாக சிம்பு டிவிட்டரில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
We don't need anyones advice nor their support . All we need is our courage and unity . Stand together and don't fall prey #jallikattu
— STR (@iam_str) January 22, 2017
சிம்பு கூறுகையில், ஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறி போவதாக கூறுகிறார்கள். அப்படியானால், அவர்கள் திசைமாற்ற முற்படுகிறார்கள். எனவே குழப்பமடையாதீர்கள். தொடர்ந்து ஒற்றுமையோடு இருங்கள்.
Request students who r well read and sensible to stand front and take a call . We are not here to fight and do what u feel is right .
— STR (@iam_str) January 22, 2017
நமக்கு யாருடைய அறிவுரையும், ஆதரவும் தேவையில்லை. நமக்கு தைரியமும் ஒற்றுமையுமே தேவை. ஒற்றுமையாக இருங்கள். சூதில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
Stating that the issue is getting diverted itself means they r trying to divert it . Lets not get confused and pls stay united #jallikattu
— STR (@iam_str) January 22, 2017
மாணவர்களே உங்களுக்கு எது நல்லது என்றுபடுகிறதோ அதை செய்யுங்கள். இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.