For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லையில் டாஸ்மாக் கடை சுவற்றில் ஓட்டை போட்டு மதுபானங்கள் ஆட்டை!

நெல்லை அருகே டாஸ்மாக் கடையில் துளை போட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை அருகே டாஸ்மாக் கடையில் துளை போட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை அருகேயுள்ள ராதாபுரம் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து மதுக்கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டன.

Liquor bottles are stolen in Nellai TASMAC shop

அதன்படி இந்த மதுக்கடையும் மூடப்பட்டு ராதாபுரம் செல்லும் சாலைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கடையை மூடிவிட்டு சென்ற கடை ஊழியர்கள் மீண்டும் கடையை திறக்க வந்த போது கடையின் பக்கவாட்டு சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை பார்த்த அதிர்ந்தனர்.

மேலும் கடையில் இருந்த விலை உயர்ந்த 339 மது பாட்டில்கள் திருடி போய் இருப்பதை பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து கடை மேற்பார்வையாளர் ராமர்பாண்டியன் ராதாபுரம் போலீஸில் புகார் செய்தார். எஸ்ஐ சிவசங்கரன் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த டாஸ்மாக் மதுக்கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிந்து டாஸ்மாக் கடையில் துளை போட்டு திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Expensive Liquor bottles were stolen from Radhapuram TASMAC shop by drilling hole in the wall of the shop.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X